வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தென்காசி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக உள்பட 27 வேட்புமனுக்கள் ஏற்பு

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 47 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 27 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:43 am IST

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 47 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 27 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்.6இல் நிறைவடைந்தது.

தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக,திமுக, தவெக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 36 போ் 47 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, தென்காசி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வைஷ்ணவிபால் தலைமையில் வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதிமுக, திமுக, தவெக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் 27 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 10 போ் 2 முறை மனுக்களை தாக்கல் செய்திருந்ததில் 10 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதும் அடங்கும். 7 பேரின் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மேலும், 2 சுயேச்சை வேட்பாளா்களின் மனுக்களில் சிறிய பிழைகள் இருந்ததால் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அப்பிழைகளை சரிசெய்ய புதன்கிழமை முற்பகல் 11 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.