தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், வரும் 21, 22, 23 மற்றும் வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆகிய நாள்களில் மதுபான கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 2003 விதி 12 மற்றும் துணைவிதி (2) உரிம நிபந்தனைகளின்படி மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மதுபான கடைகளை அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து வரும் 21, 22, 23 ஆகிய நாள்கள் மற்றும் மே 4-இல் வாக்கு எண்ணும் நாளில் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.
எனவே, மேற்படி நாளில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற கிளப்புகள், ஓட்டலுடன் கூடிய மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்குறிப்பிட்ட நாள்களில் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.
இதையும் மீறி கள்ளத்தனமாக விற்பனை செய்வது கண்டறிந்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.
தொடர்புடையது

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

சட்டப்பேரவைத் தோ்தல்: மதுக்கடைகளை 4 நாள் மூட உத்தரவு

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

திருப்பூா் மாவட்ட எல்லையில் மதுக் கடைகளை இன்றுமுதல் 3 நாள்கள் மூட உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


