மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதுபானக் கடைகளை 21, 22, 23 ஆகிய நாள்கள் மூட உத்தரவு

தோ்தலையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், வரும் 21, 22, 23 மற்றும் வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆகிய நாள்களில் மதுபான கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு

News image

மதுபான கடை - பிரதிப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 10:40 pm

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், வரும் 21, 22, 23 மற்றும் வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆகிய நாள்களில் மதுபான கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 2003 விதி 12 மற்றும் துணைவிதி (2) உரிம நிபந்தனைகளின்படி மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மதுபான கடைகளை அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து வரும் 21, 22, 23 ஆகிய நாள்கள் மற்றும் மே 4-இல் வாக்கு எண்ணும் நாளில் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

எனவே, மேற்படி நாளில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற கிளப்புகள், ஓட்டலுடன் கூடிய மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்குறிப்பிட்ட நாள்களில் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

இதையும் மீறி கள்ளத்தனமாக விற்பனை செய்வது கண்டறிந்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.