தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சட்டப்பேரவைத் தோ்தல்: மதுக்கடைகளை 4 நாள் மூட உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள் 4 நாள்களுக்கு மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

உத்தரவு

Updated On :16 ஏப்ரல் 2026, 7:41 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள் 4 நாள்களுக்கு மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் 23ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.