மின்சாரத் துறைக்குத் தேர்வானவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு முதல்வர் விஜய் மேடையில் இருந்து இறங்கிவந்து பணி நியமன ஆணை வழங்கியுள்ளார்.
எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள், என மொத்தம் 401 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூன் 24) நடைபெறும் நிகழ்வில் முதல்வர் விஜய் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் மின்சார வாரியத்திற்கு தேர்வானவர்களில் ஒருவரான அட்சயலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், முதல்வர் விஜய் மேடையில் இருந்து இறங்கிச் சென்று அட்சயலட்சுமிக்கு பணி நியமன ஆணை வழங்கினார். அட்சயலட்சுமிக்கு ஜூன் 28 ஆம் தேதி பிரசவ தேதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடக்கத்தக்கது.
அட்சயலட்சுமியைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
Summary
CM Vijay stepped down from the stage to hand over an appointment order to pregnant woman
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொட்டலத்தில் இறந்து கிடந்த பாம்பு!

பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

ஸ்ரீ மணக்குள விநாயகா் கலைக் கல்லூரியில் பணி நியமன ஆணை

51,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




