புணேவைச் சேர்ந்த 25 வயது இளம் பணக்கார தொழிலதிபர் கேத்தன் விஷால் அகர்வால் கொலைச் சம்பவத்தில், கொலையாளியை அடையாளம் காட்டியது அவர் அணிந்திருந்த ஹூடிதான் என காவல்துறை விளக்கம்.
அண்மையில் தேனிலவு கொலை சம்பவம் போலவே, இந்தக் கொலையும் லோஹாகட் மலையில் டிரெக்கிங் சென்றிருந்த நடந்துள்ளது.
கேத்தன் அகர்வால் - வருங்கால மனைவியாகவிருந்த சியா கோயல் இருவரும் ஜூன் 18, லோனாவாலா அருகே லோஹாகட் மலைக்குச் சென்றபோது இந்தக் கொலை நடந்திருக்கிறது.
மலையேற்றத்தின்போது கால்தவறி கீழே விழுந்து கேத்தன் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது நண்பர் சேத்தன் சௌத்ரி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேத்தன், மிகச் சிறந்த மலையேற்ற பயிற்சி பெற்றவர், அவர் விழுந்த இடத்திலிருந்து கால் தவறி விழ வாய்ப்பேயில்லை என குடும்பத்தார் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து காவல்துறை விசாரணையைத்தொடங்கினர்.
மேலும், கேத்தனின் குடும்பத்தினர், அவரது வருங்கால மனைவியான சியா கோயல் மீது தங்களுக்கு இதுவரை சந்தேகம் வரவில்லை என்றாலும், கொலைக்கு முந்தைய காலகட்டத்தில் அவர் சில சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை வெளிப்படுத்தியதாகக் காவல்துறைக்கு தெரிவித்திருந்ததும் அடிப்படையாக இருந்தது.
அதாவது, ஏற்கனவே இந்த லோஹாகட் மலையேற்றத்திற்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். அப்போது கேத்தனை அவர் கீழே தள்ளியிருக்கிறார். ஆனால், ஒரு பாம்பிடமிருந்து அவரைக் காப்பாற்றவே அவ்வாறு செய்ததாக சியா விளக்கம் அளித்திருந்தாராம்.
அதுபோலவே பாலி செல்ல திட்டமிட்டு, அந்தப் பயணம் கைவிடப்பட்டதால், மீண்டும் லோஹாகட் மலையேற்றத்திற்குச் செல்ல சியா பிடிவாதம் பிடித்தது போன்றவைதான் அவருக்கு எதிரான ஆதாரங்களாக மாறியிருக்கின்றன.
கொலையாளி, சேதன் சௌத்ரியுடன் இணைந்து இந்தக் கொலையில் சியாவிற்கும் பங்கு இருக்கலாம் என்ற கேதனின் குடும்பத்தினரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தின.
மலையேற்றத்தின்போது நுழைவுச் சீட்டு பெறும் இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் கேத்தன் - சியா இருவரும் ஒன்றாக செல்வது பதிவாகியிருந்தது.
சற்று இடைவெளியில் ஒருவர் முகம் மறைக்கும்படி ஹூடி அணிந்திருந்தார். இந்த வெய்யில் நேரத்தில் ஹூடி அணிந்து சென்றவர் யார் என விசாரித்தபோது சேதன் என்பது தெரிய வந்தது. அவருடைய செல்போன் எண்ணுக்கு சியா பல நூறு முறை பேசியிருப்பதும், பல மணி நேரங்கள் அந்த அழைப்புகள் நீடித்ததும் விசாரணையில் தெரிய வந்ததும், மர்ம முடிச்சு அவிழ்ந்தது.
இருவரிடமும் முறைப்படி விசாரித்தபோது, அவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டனர். சியா குடும்பத்தினர், கேத்தனை திருமணம் செய்ய பேசியிருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சியா, தன்னுடைய காதலன் சேதனை திருமணம் செய்ய வேண்டி, கேத்தனை கொலை செய்ய திட்டமிட்டு பல முறை அது தோல்வியடைந்து, ஜூன் 18ஆம் தேதி கொலை செய்திருக்கிறார்கள்.
அண்மையில் திருமணமான பெண், கணவரை தேனிலவு அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், திருமணத்துக்கு முன்பே, மலையேற்றம் அழைத்துச் சென்று மணமகனை காதலனுடன் சேர்த்து சியா கொலை செய்திருக்கிறார்.
Summary
Pune youth murdered! Hoodie led to the killer's exposure.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

நாட்டின் பணக்கார முதல்வர் யார்? விஜய்க்கு எந்த இடம்?
தீர்வு கிட்டுமா, மோதல் முற்றுமா?
பழையன கழிதலும்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




