தமிழகத்தில் 46,000 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் சுமார் 2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக 46,000 பேருக்கு வழங்கப்பட உள்ளன.
இதற்காக ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதனை முதல்வர் ஜோசப் விஜய் விரைவில் தொடக்கிவைப்பார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 46,000 புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்ய தயாராக உள்ளதாகவும் தகுதியானவர்கள் அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும் என்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரேஷன் கார்டுக்கு வீட்டிலிருந்தேபடியே ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும் திருத்திக்கொள்ளவும் முடியும்.
அண்மையில் செய்தியாளர்களுடன் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மிக விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
New ration cards ready for 46,000 people will be Distributed soon
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும்? அமைச்சர் தகவல்

மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு மருத்துவச் செலவைத் திரும்பப் பெற புதிய திட்டம்!

தகுதியான குடும்பங்கள் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தில்லி முதல்வா்
விரைவில் புதிய ரேஷன் அட்டைகள்- அமைச்சா் வெங்கடரமணன்
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!




