கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

முல்லைப் பெரியாறு அணை: பன்னாட்டுக் குழுவின் ஆய்வு தேவையில்லை

முல்லைப் பெரியாறு அணையைப் பன்னாட்டுக் குழு ஆய்வு  செய்ய வேண்டிய தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:46 am

DIN

முல்லைப் பெரியாறு அணையைப் பன்னாட்டுக் குழு ஆய்வு  செய்ய வேண்டிய தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (மார்ச் 22) நடைபெற்ற விசாரணையில் கேரள மாநிலம் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அதில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும், புதிய அணையைக் கட்ட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சர்வதேச குழு அமைத்து அணையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று (மார்ச் 23) உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், பன்னாட்டு நிபுணர்களைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டியத் தேவையில்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாகவும், வெள்ளப்பெருக்கு, கனமழை காரணமாக அணையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தமிழக அரசு பதில் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் முயற்சிக்கு கேரள அரசு இடையூறாக உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி கான்வில்கர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.