கடலூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். அதோடு சட்டப்பேரவையில் எனது கேள்விக்கு பதிலளித்தவாறு என்.எல்.சி பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கொண்ட குழுவை தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும். இந்த பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்க எடுக்கவில்லையென்றால் தமிழர் விரோத என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை கண்டித்து தொடர்போராட்டங்களை அதிமுக நடத்தும் என ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.