கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் கருப்பு தினம் அனுசரிப்பு

கடந்த 2009-ஆம் ஆண்டு  வழக்குரைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து அனுசரிக்கப்படும் கருப்பு தினத்தை முன்னிட்டு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் கருப்பு தினம் அனுசரிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 7:34 pm

DIN

சென்னை: கடந்த 2009-ஆம் ஆண்டு  வழக்குரைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து அனுசரிக்கப்படும் கருப்பு தினத்தை முன்னிட்டு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உயர்நீதிமன்றம் வந்திருந்த சுப்பிரமணியசாமி மீது வழக்குரைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், வழக்குரைஞர்களை கைது செய்ய முயன்ற போது கலவரம் ஏற்பட்டது. 

கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் போது போலீஸார் நடத்திய தடியடியில் வழக்குரைஞர்கள் பலர் படுகாயமடைந்தனர். மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் கார்களின் கண்ணாடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலைக் கண்டித்து ஆண்டு தோறும் பிப்ரவரி 19-ஆம் தேதியை வழக்குரைஞர்கள் கருப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர்.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை (பிப்.19) கருப்பு தினத்தை கடைபிடித்தனர். உயர்நீதிமன்ற வளாகத்தின் ஆவின் நுழைவு வாயில் அருகே சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை நாங்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். வழக்குரைஞர்களை தாக்கிய காவலர்களையும், காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விசாரித்து சட்ட ரீதியாக  தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.