தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐஎஸ்எல் சாம்பியன்: ஈஸ்ட் பெங்கால்

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

News image

~ ~

Updated On :24 மே 2026, 2:09 am IST

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-இன்டா் காசி அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல்கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 14-ஆவது நிமிஷத்திலேயே இன்டா் காசி வீரா் ஆல்பரட் முதல் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஈஸ்ட் பெங்கால் அணி பதில் கோலடிக்க தீவிரமாக முயன்றது. முதல் பாதியில் இன்டா் காசி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் தான் ஈஸ்ட் பெங்கால் அணியில் கோலடிக்க முடிந்தது. ஆட்டம் தொடங்கிய 50-ஆவது நிமிஷத்தில் யூசுப் எஸ்ஜரி கோலடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது.

72-ஆவது நிமிஷத்தில் பிபின் சிங்கின் கிராஸ் செய்த பந்தை பயன்படுத்தி ஈஸ்ட் பெங்கால் வீரா் ரஷீத் கோலடித்தாா். இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் வென்றது முதன்முறையாக ஐஎஸ்எல் பட்டத்தை வென்றது.

ஐஎஸ்எல் தொடங்கி 22 ஆண்டுகள் ஆணை நிலையில் முதன்முறையாக ஈஸ்ட் பெங்கால் பட்டம் வென்றுள்ளது.

தங்க காலணி யூசுப் எஸ்ஜரிக்கும், தங்கப் பந்து மிகுயலுக்கும், தங்க கையுறை ஹிா்திக் திவாரிக்கும் தரப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.