ஈஸ்ட் பெங்கால் அணியிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது சென்னையின் எஃப்சி அணி.
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை நேரு விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கியதுமே ஈஸ்ட் பெங்கால் வீரா் எட்மண்ட் 7-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். பின்னா் முதல் பாதியிலேயே சென்னை வீரா் இா்பான் யத்வாத் 28-ஆவது நிமிஷத்தில் பதில் கோலடிக்க இடைவேளையில் 1-1 என சமநிலை நீடித்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் தொடா்ந்து அசத்தலாக ஆடியதில் 83=-ஆவது நிமிஷத்தில் பிபின் சிங்கும், 90 பிளஸ் நிமிஷத்தில் நந்தகுமாரும் கோலடித்தனா்.
சென்னையின் கோலடிக்கும் முயற்சிகளை ஈஸ்ட் பெங்கால் தரப்பு முறியடித்தது. இறுதியில் 3-1 என்ற கோல்கணக்கில் வென்றது ஈஸ்ட் பெங்கால்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








