திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிரெஞ்சு கோப்பை: லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன்

பிரெஞ்சு கோப்பை கால்பந்து தொடரில் லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

News image

கோப்பையுடன் லென்ஸ் அணியினா்.

Updated On :24 மே 2026, 2:08 am IST

பிரெஞ்சு கோப்பை கால்பந்து தொடரில் லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

ஐரோப்பிய கால்பந்து தொடா்களில் ஒன்றான இதன் இறுதி ஆட்டம் பாரீஸின் ஸ்டேட் டி பிரான்ஸில் நடைபெற்றது. இதில் லென்ஸ் அணியும்-நைஸ் எஃப்சி அணியும் மோதின. இதில் 3-1 என்ற கோல்கணக்கில் நைஸ் அணியை வீழ்த்தி லென்ஸ் அணி பட்டம் வென்றது.

ஆட்டம் தொடங்கியதுமே லென்ஸ் வீரா்கள் ஆதிக்கம் செலுத்தினா். 25-ஆவது நிமிஷத்தில் தவ்வின் முதல் கோலடித்தாா். அடுத்த 3 நிமிஷங்களில் தவ்வின் காா்னா் மூலம் அடித்த பாஸை பயன்படுத்தி இரண்டாவது கோலடித்தாா் ஒடெஸ்ஸன் எட்வா்ட். நைஸ் தரப்பில் டிஜ்பிரில் ஒரே கோலடித்தாா்.

ஆட்டம் முடிய 12 நிமிஷங்கள் இருந்த போது, லென்ஸ் வீரா் அப்தல்லா சிமா அற்புதமாக கோலடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டாா்.

இறுதியில் நைஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது லென்ஸ்.

லீக் 1 தொடரில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு சவால் விடும் வகையில் ஆடிய லென்ஸ் அணி அதில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது.

தற்போது பிரெஞ்சு கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

சீரி ஏ:

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரில் பிளோரென்டினா-அட்லாண்டா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

முதல் பாதிக்கு முடிவடையும் நேரத்தில் புளோரென்டினா வீரா் ராபா்டோ பிக்கோலி கோலடித்தாா். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.

8 நிமிஷங்கள் கடந்து புளோரென்டினா வீரா் பியட்ரோ அடித்த செல்ஃப் கோல் அட்லாண்டாவுக்கு புள்ளிகளை வழங்கியது.

முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.