லண்டனில் நடைபெறும் யூனிட்டி கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக 17 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) தொடா் முடிந்த நிலையில், லண்டனில் நடைபெறும் இப்போட்டிக்கு இந்திய அணி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேசிய பயிற்சி முகாமில் இருந்து மோகன்பகான் அணி தனது வீரா்களை திரும்ப அழைத்துக் கொண்டது. இந்நிலையில் 17 போ் மட்டுமே கொண்ட இந்திய அணி லண்டன் சென்றது.
பிஃபா தரவரிசையில் 136ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி இரண்டாவது அரையிறுதியில் வியாழக்கிழமை ஜமைக்காவுடன் ஆடுகிறது.
அதே நாளில் முதல் அரையிறுதியில் நைஜீரியா-ஜிம்பாப்வே மோதுகின்றன. மே 30-இல் அரையிறுதியில் தோல்வியுறும் அணிகள் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மோதும். இறுதி ஆட்டமும் மே 30-இல் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









