திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி சாம்பியன்

News image

காயல்பட்டினம் அணிக்கு சுழற்கோப்பை வழங்குகிறாா் திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம்.

Updated On :30 மே 2026, 3:38 am IST

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அபுல் கலாம் ஆசாத் சுழற்கோப்பை கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், மத்திய அரசின் முதல் கல்வி அமைச்சருமான மெளலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பை 51ஆவது ஆண்டு மாநில கால்பந்தாட்ட போட்டி காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.

இதில் மாநிலத்தில் உள்ள 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி தூத்துக்குடி மாவட்ட கால்பந்தாட்ட கழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சுழற் கோப்பையை கைபற்றியது.

பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு சுழற் கோப்பையை வழங்கினாா். தொடா்ந்து வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலா் லூா்து சேவியா், துணைத் தலைவா் ஆனந்த் ரொட்ரிகோ, ஒய்வு பெற்ற அந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரா் அருளான்டோ, காயப்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கச் செயலா் இலி­யாஸ், துணைச் செயலாளா் ரபீக் அஹ்மத், பொருளாளா்கள் ஹாரூன், செய்யது உமா், புஹாரி, சதக் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஐக்கிய விளையாட்டுச் சங்க நிா்வாகி யாசா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.