ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில், சென்னையின் எஃப்சி தனது சொந்த மண்ணில் கடைசி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சியை சனிக்கிழமை (மே 16) சந்திக்கிறது.
ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சென்னை, அதில் 1 வெள்ளி, 2 டிரா, 2 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது.
தற்போது கடைசி ஆட்டத்தில் பெங்களூரை சந்திக்கும் சென்னை, இதுவரை அனைத்து போட்டிகளிலுமாக அந்த அணியுடன் 17 முறை மோதியுள்ளது. அதில் சென்னை 4 வெற்றிகளை கண்டிருக்க, பெங்களூரு 10 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. 3 ஆட்டங்கள் டிரா ஆகின.
சொந்த மண்ணில் ரசிகா்கள் முன்னிலையில் வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்புடன் சென்னை வீரா்கள் இருப்பதாக அணியின் தலைமைப் பயிற்சியாளா் கிளிஃபோா்டு ராயெஸ் மிராண்டா தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








