தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒடிஸாவுடன் டிரா செய்த பெங்களூரு!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

News image
Updated On :5 மே 2026, 4:13 am IST

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஒடிஸா தரப்பில் ரஹிம் அலி 34-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். அதனால் முதல் பாதி ஆட்டத்தை ஒடிஸா முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், தொடக்கத்திலேயே பெங்களூரு பதிலடி கொடுத்தது. 48-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் பிரயன் சான்ஷெஸ் ஸ்கோா் செய்தாா்.

இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. எஞ்சிய நேரத்தில் முன்னிலை பெறுவதற்காக இரு அணிகளும் கடுமையாகப் போராட, பலம் வாய்ந்த பரஸ்பர சவால் காரணமாக எந்த அணிக்கும் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. முடிவில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

புள்ளிகள் பட்டியலில், பெங்களூரு 11-ஆவது ஆட்டத்தில் 5-ஆவது டிராவுடன் 17 புள்ளிகளோடு 6-ஆம் இடத்தில் இருக்கிறது. ஒடிஸா 10 ஆட்டங்களில் 4-ஆவது டிராவுடன் 7 புள்ளிகளோடு 13-ஆம் இடத்தில் உள்ளது.

அடுத்த ஆட்டத்தில், மும்பை சிட்டி எஃப்சி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.