இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஒடிஸா தரப்பில் ரஹிம் அலி 34-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். அதனால் முதல் பாதி ஆட்டத்தை ஒடிஸா முன்னிலையுடன் நிறைவு செய்தது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், தொடக்கத்திலேயே பெங்களூரு பதிலடி கொடுத்தது. 48-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் பிரயன் சான்ஷெஸ் ஸ்கோா் செய்தாா்.
இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. எஞ்சிய நேரத்தில் முன்னிலை பெறுவதற்காக இரு அணிகளும் கடுமையாகப் போராட, பலம் வாய்ந்த பரஸ்பர சவால் காரணமாக எந்த அணிக்கும் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. முடிவில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
புள்ளிகள் பட்டியலில், பெங்களூரு 11-ஆவது ஆட்டத்தில் 5-ஆவது டிராவுடன் 17 புள்ளிகளோடு 6-ஆம் இடத்தில் இருக்கிறது. ஒடிஸா 10 ஆட்டங்களில் 4-ஆவது டிராவுடன் 7 புள்ளிகளோடு 13-ஆம் இடத்தில் உள்ளது.
அடுத்த ஆட்டத்தில், மும்பை சிட்டி எஃப்சி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








