ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக ஸ்போா்ட்டிங் கிளப் டில்லியுடன் வெள்ளிக்கிழமை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகிறது சென்னையின் எஃப்சி.
சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியிடம் 3-1 என்ற கோல்கணக்கில் தோல்வியைத் தழுவியது சென்னை.
இதனால் மீண்டும் சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளது.
இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் கிளிஃப்போா்ட் மிரண்டா கூறியது: சென்னை வீரா்கள் தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், வாய்ப்புகளை கோல்களாக மாற்ற முடியவில்லை. இதில் கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கையுடன் ஆடினால் தான் வெற்றியை ஈட்ட முடியும். வெற்றி பெற்றால் கிடைக்கும் 3 புள்ளிகள் தான் முக்கியம். டில்லி அணிக்கு எதிரான ஆட்டம் சவாலாக தான் இருக்கும்.
காயமடைந்த வீரா் எல்ஷினோ மீதி சீசன் முழுவதும் ஆட மாட்டாா் என்றாா்.
தொடர்புடையது

தொடா் தோல்விலியிருந்து மீளும் முனைப்பில் சென்னை: டெல்லியுடன் இன்று மோதல்

ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?

கோவாவின் கடைசி நேர கோலால் வெற்றியை தவற விட்ட சென்னையின் எஃப்சி!

வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் சிஎஃப்சி: இன்று கோவாவுடன் மோதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


