கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஆஸ்திரேலியாவில் எனக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்: முரளி விஜய் ஆதங்கம்!

பயிற்சியின்போது நான் விளையாடப் போவதில்லை எனத் தெரிந்து நொறுங்கிப் போனேன்... 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:16 am

எழில்


தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சரியாக விளையாடாத முரளி விஜய்க்குத் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடமில்லை. மயங்க் அகர்வால், கே.எல். ராகுல், விஹாரி ஆகியோர் ஆஸி.க்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் தொடர்க்க வீரர்களாகக் களமிறங்கினார்கள். 

எனினும் தன்னை மூன்றாவது டெஸ்ட்டில் தேர்வு செய்திருக்கவேண்டும் என்று ஆதங்கப்படுகிறார் முரளி விஜய். இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

இந்திய அணியில் இடம்பெறாதது என்னை வேதனைப்படுத்துகிறது. வருத்தம் இல்லை, எனினும் நான் வேதனையடைந்துள்ளேன். மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் நான் விளையாடுவேன் என நினைத்தேன். பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் நான் நன்றாக விளையாடினேன். ஒரு இன்னிங்ஸ் சரியாக அமைந்தால் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிடுவேன் என நினைத்தேன். எனவே மெல்போர்னில் விளையாடுவேன் என நம்பிக்கையுடன் இருந்தேன். பயிற்சியின்போது நான் விளையாடப் போவதில்லை எனத் தெரிந்து நொறுங்கிப் போனேன். மக்களுக்கு என்னைத் தெரியவில்லை, அல்லது புரிந்துகொள்வதில்லை. புதுமுகங்களால் எனது வாய்ப்பு பறிபோகும் என அஞ்சவில்லை. எனக்கு 34 வயதுதான் ஆகிறது. நல்ல உடற்தகுதியுடன் உள்ளேன். இன்னும் நிறைய டெஸ்ட்டுகள் விளையாடும் அளவுக்கு வலு உள்ளது. மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் தருணங்களை எதிர்கொள்வேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.