சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: பிசிசிஐ அனுமதி

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்த பிசிசிஐ சனிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:30 pm

Raghavendran

இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்களை நிர்ணயிக்கும் பிசிசிஐ கமிட்டி கூட்டம் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சௌரவ் கங்குலி, பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் சௌத்ரி, நிர்வாக பொது மேலாளர்கள் சபா கரீம் மற்றும் ராஜன் திவாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஐசிசி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க துபை சென்றுள்ளதால் பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் சொந்த காரணங்களுக்காக பிசிசிஐ தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா ஆகியோர் பங்கேற்கவில்லை. 

இந்தக் கூட்டத்தின் முடிவில் இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்திய அணி பங்கேற்கும் அடுத்த சீசனுக்கான கிரிக்கெட் தொடர்களையும் வரைமுறைப்படுத்தியது. அப்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அக்டோபர் மாதம் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த ராஜ்கோட் அல்லது ஹைதராபாத்தில் உள்ள மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிசிசிஐ வழங்கியுள்ள இந்த அனுமதி, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் நிர்வாகத்தினரின் ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு நடத்தப்படவுள்ளது.

அடுத்த சீசன் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஜுன் 14-ம் தேதி பெங்களூருவில் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடருடன் தொடங்குகிறது. இது அந்த அணிக்கு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். பின்னர் செப்டம்பர் 18-ந் தேதி முதல் ஆசிய கோப்பை நடைபெறவுள்ளது. இதில் இந்திய, பாகிஸ்தான் அரசுகளின் அனுமதிக்குப் பிறகு பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து தெரியவரும். 

இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளுடன் மும்பை, புணே, திருவனந்தபுரம், இந்தூர், குவாஹட்டி ஆகிய இடங்களில் 5 ஒருநாள் மற்றும் கொல்கத்தா, சென்னை, கான்பூர் அல்லது லக்னோ ஆகிய இடங்களில் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு 2 மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. பின்னர் அங்கிருந்து நியூஸிலாந்து செல்லும் இந்திய அணி 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் மோதுகிறது.

பின்னர் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. மொஹாலி, தில்லி, நாக்பூர், ஹைதராபாத், ராஞ்சி, விசாகப்பட்டினம், பெங்களூரு ஆகிய இடங்களில் இத்தொடர் நடைபெறவுள்ளது. பின்னர் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்பின்னர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் விளையாடுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.