கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

ஷிம்ரன் ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து என அந்த அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

News image
- படம் | AP
Updated On :24 பிப்ரவரி 2026, 1:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஷிம்ரன் ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து என அந்த அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மும்பை வான்கடே திடலில் நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிரடியாக விளையாடிய ஷிம்ரன் ஹெட்மேயர் 34 பந்துகளில் 85 ரன்கள் (7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து!

ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் அபார வெற்றி பெற்ற நிலையில், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 3-வது வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடும் ஷிம்ரன் ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து என அந்த அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜிம்பாப்வேவுக்கு எதிரானப் போட்டியில் ஷிம்ரன் ஹெட்மேயர் பேட்டிங் செய்த விதம், அவரது ஆட்டத்தை பின்வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீணாக்கிவிட்டதோ என்பது போன்று இருந்தது. அவர் மிகவும் அற்புதமான வீரர். அவரால் எந்த ஒரு சூழலுக்கு ஏற்பவும் சுழல் மற்றும் வேகப் பந்துவீச்சுக்கு எதிராக விளையாட முடியும். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மிகவும் முக்கியமான வீரராக அவர் இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அணியின் சொத்து அவர்தான்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்து ஹெட்மேயருக்கு மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த இடத்தில் வெற்றிகரமாக விளையாடி வருகிறார். அவர் அதிரடியாக விளையாடுவது மேற்கிந்தியத் தீவுகளின் தன்னம்பிக்கையை உண்மையில் மிகவும் அதிகரித்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.