சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஒரு தவறு செய்தால் கூட நான் வெளியேற்றப்படுவேன்: தினேஷ் கார்த்திக்

தற்போதைய காலகட்டத்தில் ஒரு தவறு செய்தால் கூட நான் வெளியேற்றப்படுவேன் என்று விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:30 pm

Raghavendran

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ள நிதாகஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பேசியதாவது:

தற்போதைய சூழலில் ஒவ்வொரு போட்டியும் எனக்கு மிக முக்கியமானது. இதில் ஒரேயொரு தவறு செய்தால் கூட நான் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படுவேன். எனவே ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. இதில் அழுத்தம் இருந்தாலும் அதை நான் சவாலாக எடுத்துக்கொள்கிறேன். உலகக் கோப்பை நடைபெற இன்னும் போதிய கால அவகாசம் உள்ளது. எனவே நான் அதுகுறித்து சிந்திக்கவில்லை.

நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியுமே எனக்கு முக்கியமானதாகக் கருதுகிறேன். அதில் என்னுடைய சிறந்த பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். வாய்ப்பு அளித்தால் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுவான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த விரும்புகிறேன். எனக்கு அளிக்கப்படும் சவால்களில் இருந்து சாக்கு-போக்கு சொல்லி வெளியேற விரும்பவில்லை. மாறாக அதனை வெற்றியுடன் செய்து முடிக்க விரும்புகிறேன். 

இலங்கை அணியின் ஆடுகளங்கள் சவால் நிறைந்ததாக உள்ளது. இங்கு பந்து செல்லும் திசையை கணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே தான் அதிக பந்துகள் தடுப்பாட்ட முறையில் ஆடப்படுகின்றன. சமீபத்தில் தான் வங்கதேச அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து. அப்போது முதல் அவர்களின் ஆட்டத்திறனில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. களத்தில் எதிரணிக்கு கடும் சவால்களை அளிக்கின்றனர். குறிப்பாக ஆசிய மைதானங்களில் நடைபெறும் போட்டிகளில் வங்கதேசத்தின் ஆட்டம் சிறப்பாக அமைந்து வருகிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற எப்போதும் போன்ற பயிற்சிகளிலேயே இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. இந்த தொடரில் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டோம். குறிப்பாக வாய்ப்பு கிடைத்த அனைத்து வீரர்களும் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். வங்கதேசத்துடன் வென்றால் அவர்கள் 2-ஆம் கட்ட அணி என்று சுலபமாக கூறிவிடுகின்றனர். அதுவே தோல்வியுற்றால் கடுமையான விமரிசனங்களை முன்வைக்கின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.