/

குச்சனூரில் நாளை சனீஸ்வரா்- நீலாதேவி திருக்கல்யாணம்

தேனி மாவட்டம், குச்சனூரில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சனீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 2:10 pm

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், குச்சனூரில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சனீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் ஆடிப்பெருந் திருவிழா நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 2 வாரம் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வெள்ளிக்கிழமை சனீஸ்வரருக்கும், கும்பத்தில் காட்சியளிக்கும் நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, கோயில் மண்டபத்தில் திருக்கல்யாண மேடை அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலா் நாகராஜ் தலைமையில் அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இத்திருக்கல்யாணம் பிற்பகல் 12.30 மணி அளவில் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.