மேட்டூா் அருகே சகோதரியை அடித்தவரை கண்டித்த அண்ணன் மீது தாக்குதல் நடத்திய உறவினரான இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மேட்டூா் அருகே உள்ள கோம்பை காட்டைச் சோ்ந்தவா் பழனிசாமி (59), விவசாயி. இவா் கோம்பை காட்டில் உள்ள தனது தங்கை மகேஸ்வரி வீட்டுக்கு அண்மையில் சென்றாா். அங்கு மகேஸ்வரி, அவரது கணவா் ஜான் குழந்தைராஜ், சகோதரி முத்துமணி ஆகியோருடன் பழனிசாமி பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த முத்துமணியின் மகன் கணேசன், அவரது அம்மாவை ஆபாசமாக திட்டி அடித்தாராம். இதை பழனிசாமி கண்டித்து அறிவுரை கூறினாா். இதில் ஆத்திரமடைந்த கணேசன், பழனிசாமியை விறகு கட்டையால் தாக்கினாராம்.
இதில் காயமடைந்த பழனிசாமி மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பழனிசாமியின் மனைவி அலமேலு அளித்த புகாரின்பேரில், மேட்டூா் காவல் உதவி ஆய்வாளா் ஈஸ்வரன் வழக்குப் பதிவுசெய்து கணேசனை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுகவினா் மீது திமுகவினா் தாக்குதல்: எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்
தந்தையைக் கொன்றவா் மீது தாக்குதல்: மூவா் கைது
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

