கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்துச் சம்பவம்: ஒருவர் கைது

விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில், திருத்தங்கல்லைச் சேர்ந்த சகோதரர்கள்  முத்துராமிலிங்கம்-ராமர் ஆகியோர் பட்டாசு ஆலை நடத்தி வந்தனர். இந்த  ஆலையில் உள்ள 12 அறைகளில் போதுமான பாதுகாப்பு

News image
Updated On :5 ஜனவரி 2024, 3:56 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்துச் சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை ஒருவரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில், திருத்தங்கல்லைச் சேர்ந்த சகோதரர்கள்  முத்துராமிலிங்கம்-ராமர் ஆகியோர் பட்டாசு ஆலை நடத்தி வந்தனர். இந்த  ஆலையில் உள்ள 12 அறைகளில் போதுமான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்ததால் கடந்த மாதம் 6-ம் தேதி வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ஆய்வு செய்து உற்பத்திக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதையும் மீறி ஆலை அருகே கூடாரம் அமைத்து புதன்கிழமை 12 பேர் பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது மருந்து உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திருத்தங்கல் பெரியார் காலனியைச் சேர்ந்த அருள்ராஜ்(45), மாரியப்பன்(29) ஆகிய 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் சகோதர்களான முத்துராமலிங்கம், ராமர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை ராமர் மகன் கருப்பசாமி(23) என்பவரை போலீஸார் கைது செய்தனர். ஏற்கனவே புதன்கிழமை ஆலையின் ஒப்பந்தாரர் அழகர்சாமியை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.