கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த கூடாரத்தில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 2 பேர் சாவு

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக கூடாரம் அமைத்து பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உடல்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:44 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக கூடாரம் அமைத்து பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் அருகே காரிசேரி பகுதியில் திருத்தங்கல்லைச் சேர்ந்த முத்துராமலிங்கம்-ராமர் சகோதரர்கள் பட்டாசு ஆலையை நடத்தி வருகின்றனர். இந்த ஆலையில் 12-க்கும் மேற்பட்ட அறைகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப்படாமல் இருப்பதாக வந்த புகாரை அடுத்து வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் கடந்த மாதம் 6-ம் தேதி ஆய்வு செய்து தாற்காலிகமாக பட்டாசுகள் தயாரிக்க தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் மீறி அந்த ஆலையின் அருகே சட்டவிரோதமாக தொழிலாளர்கள் தங்கும் கூடாரத்தில் பாதி வேலை முடிந்த நிலையில் உள்ள பட்டாசுகளை முழுமைப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்  இக்கூடாரத்தில் உள்ள 3 அறைகளில் புதன்கிழமையும் வழக்கம் போல் திருத்தங்கல் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 12 பேர் பேன்சிரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, கடும் வெய்யில் அடித்த நிலையில் மணி மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் ஏற்பட்ட தீ மளமள அடுத்தடுத்த கூடாரத்தில் உள்ள அறைகளுக்கும் பரவியது. மேலும், அருகில் இருந்த பட்டாசு ஆலைகளில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உள்ளே புக முடியாத அளவிற்கு அறைகளில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதில், 7 தொழிலாளர்கள் மட்டும் சோளக்காட்டு பகுதியில் தப்பியோடிய நிலையில், 5 பேர் மட்டும் விபத்தில் சிக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாக தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் இருந்து விரைந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதன் பின் இடிபாடுகளில் சிக்கிய உடல் கருகி உயிரிழந்து கிடந்த  திருத்தங்கல் பெரியார் நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் அருள்ராஜ்(45), அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(29) ஆகியோரின் சடலங்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதேபகுதியைச் சேர்ந்த பால்ராஜின் மகன் ரமேஷ்(29), லில்லி என்பவரின் மகன் பிரபாகரன்(24), அதே பகுதியில் சத்யா நகரைச் சேர்ந்த பாக்கியராஜின் மகன் முரளி(25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்,  மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், கோட்டாட்சியர் உதயகுமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, விருதுநகர் வட்டாட்சியர் சிவஜோதி, தனி வட்டாட்சியர்(தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில்) ஜெயந்தி, தொழிற்சாலை பாதுகாப்பு துறை ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்டோர் வெடி விபத்து நடந்த ஆலைக்கு விரைந்து வந்து  பார்வையிட்டனர். மேலும்,இந்த விபத்து தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் பட்டாசு ஆலையை நடத்தி வரும் முத்துராமலிங்கம்-ராமர் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.