மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் ஜமால் முகமது(61). இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வந்தார். கடந்த சிலநாள்களுக்கு முன்பு இவர் திடீரென மாயமானாது தொடர்பாக அவரது உறவினர்கள் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில், ரியல் எஸ்டேட் அதிபர் சம்பவம் தொடர்பாக மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் மேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தாராம். அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்ததில் கொலை செய்து சடலத்தை கொடைக்கானல் மலைப்பகுதி பள்ளத்தாக்கில் வீசியதாகவும், அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் தெரிவித்தாராம்.