கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் வங்கிக் கிளையில் போலி காசோலை மூலம் ரூ.9.82 லட்சம் மோசடி

விருதுநகரில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் போலி காசோலை கொடுத்து ரூ.9.82 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:43 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் போலி காசோலை கொடுத்து ரூ.9.82 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர்-கச்சேரி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கிளையில் கடந்த மாதம் 6-ம் தேதி மும்பை சிவாஜி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசந்த் சம்பக் என்பவரின் கணக்கில், மும்பையில் பிரசித்தி பெற்ற தனியார் நிறுவனத்தின் ரூ.9 லட்சத்து 81 ஆயிரத்து 300-க்கான காசோலை போடப்பட்டதாம்.

அதையடுத்து, மறுநாள் மும்பையில் உள்ள இதே வங்கிக் கிளையின் மூலம பணமும் எடுக்கப்பட்டுள்ளது. இக்காசோலை தனியார் நிறுவனத்தின் காசோலை என்பதால், தங்கள் வங்கி கணக்கில் இருந்து மேற்குறிப்பிட்ட தொகை எடுத்துள்ளதாக குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தனியார் நிறுவனத்தினர் நாங்கள் இத்தொகைக்கான காசோலையை யாருக்கும் வழங்கவில்லையென விருதுநகர் வங்கிக் கிளைக்கு தெரிவிக்கப்பட்டதாம். அதன் பின்னர் இங்குள்ள வங்கி அதிகாரிகள் காசோலையை தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது, வடநாட்டு மர்ம நபர் வழங்கியது போலி காசோலை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த வங்கிக் கிளையின் மேலாளர் குமரேசன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலிஸார் வங்கி கணக்கு ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த மாதம் 6-ம் தேதி மகராஷ்டிரத்தில் உள்ள புணேயில் தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில், இதே வங்கிக்கிளை மூலம் மணீஸ் கன்னியாலால் தக்கார் என்ற பேரில் ரூ.7.35 லட்சத்தை போலி காசோலை மூலம் மோசடி செய்த அதே நபர்தான், மற்றொருவரின் வங்கி கணக்கு மூலம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக வங்கியின் கண்காணிப்பு வெப் காமிராவில் ஆய்வு செய்த போது கடந்த மாதம் இதே நாளில் 35 வயதுக்குள்பட்ட ஒருவர்தான் போலி காசோலைகளை வெவ்வேறு கணக்குகளில் போட்டவர் என்பது தெரியவந்தது. எனவே இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து போலி காசோலைகளை வங்கியில் கொடுத்து பணத்தை மோசடி செய்த வடநாட்டு நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.