கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் அருகே இளைஞரின் கையை வெட்டிய சம்பவம்: 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகர் அருகே இளைஞரின் கையை வெட்டி துண்டாக்கிய சம்பவம் தொடர்பாக ஊராட்சி தலைவி கணவர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:43 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இளைஞரின் கையை வெட்டி துண்டாக்கிய சம்பவம் தொடர்பாக ஊராட்சி தலைவி கணவர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உத்தரவிட்டார்.

திருச்சுழி அருகே சிறுவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக்(18). இவர் கொத்தனாராக வேலை இருந்து வருகிறார். கடந்த மாதம் 18-ம் தேதி வீட்டிற்கு முன்பு நாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தாராம். அப்போது, அவ்வழியாக ஊராட்சி தலைவி தேவியின் கணவர் கிருஷ்ணன்(42) வந்தாராம். கார்த்திக்கை பார்த்து பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதா எனக் கேட்டு தகராறு செய்தாராம். அதையடுத்து 2 நாள்களும் தகராறு செய்து  உன்னை காலை வெட்டாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

எனவே பிரச்னை வரும் என நினைத்த பெற்றோர் கார்த்திக்கை உடனே கோவைக்கு பேருந்து ஏற்றி அனுப்பி வைத்தனர். இதையறிந்த, ஊராட்சி தலைவியின் கணவர் கிருஷ்ணன் உள்பட மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் சென்று பேருந்தை வழிமறித்து கார்த்திக்கை கீழே இறக்கியுள்ளனர். பின்னர் தோப்பு பகுதிக்கு அழைத்து சென்று இருவர் பிடித்துக் கொள்ள கிருஷ்ணன் மறைத்து வைத்திருந்த வாளால் இடது கையை வெட்டி துண்டாக்கியதோடு திரும்ப கிடைக்காமல் இருப்பதற்காக தூர வீசிவிட்டு சென்றனர். இதில், காயம் அடைந்த கார்த்திக் அலறியுள்ளார். அப்பகுதியில் இருந்த உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக எ.முக்குளம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கிருஷ்ணன்(42), முத்துக்குமார்(26), கண்ணன்(38) ஆகியோரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மரியாதை கொடுக்கவில்லை என்பதற்காக இளைஞரின் கையை வெட்டி துண்டாக்கிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் மேற்குறிபிட்ட மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உத்தரவிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.