விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சு.வசந்தன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ச.பெருமாள் முன்னிலை வகித்தார். அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கு.ஜக்கையன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில், சோலைச்சேரியில் அருந்ததியர் மக்களுக்கு குடிநீர், கழிப்பறை, வாறுகால் பிரச்னையை தீர்க்க வேண்டும். சேத்தூரில் இம்மக்களின் குடியிருப்புக்கு அருகே உள்ள அரசு மதுபானக் கடையை உடனே அகற்ற வேண்டும். ராஜபாளையம் பொம்மியம்மன் நகர் கோவில் இடத்தை அருந்ததியினர் மக்களுக்கு பட்டா முடித்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.