கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

திருச்சுழி அருகே கிரைண்டர் கல்லால் தாக்கி மனைவி கொலை

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன்(40). இவர் இப்பகுதியில் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகஜோதி(35). இவர்களுக்கு 6

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:43 am

எஸ். பாண்டியன்

திருச்சுழி அருகே கிரைண்டர் கல்லால் மனைவியை தாக்கி கொலை செய்து விட்டு திங்கள்கிழமை தப்பியோடிய டிராக்டர் டிரைவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன்(40). இவர் இப்பகுதியில் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகஜோதி(35). இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்பட 4 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் கடந்த சில நாள்களாகவே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம். அதனால், அடிக்கடி கணவன்-மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், ஞாயிற்றுக்கிழமை இரவும் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து இருவரும் தூங்குவதற்குச் சென்றுள்ளனர். இதில் மனைவியின் மீது ஆத்திரம் குறையாத மாரீஸ்வரன் அதிகாலையி்ல் எழுந்துள்ளார். பின் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லால் மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்திருக்கிறார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நாகஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் விழித்து எழுந்தனர். அதற்குள் மாரீஸ்வரன் தப்பியோடினார். இது குறித்து கிராம பொதுமக்கள் எ.முக்குளம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் நாகஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாரீஸ்வரன் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.