கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஆட்சியர் அலுவலக பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதுபோல் அலுவலகத்திற்கு வருகிற பொதுமக்கள் அனைவரும்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:42 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதுபோல் அலுவலகத்திற்கு வருகிற பொதுமக்கள் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மரக்கன்றுகள், செடிகொடிகள், தரைபுற்கள், நடந்து செல்லும் வகையில் தரைதளம், வண்ண விளக்குகளுடன் கூடிய நீருற்று மற்றும் சிலை வடிவமைப்புகளுடன் பூங்கா செயல்பட்டு வந்தது. இதை இங்கு வரும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. அதனால் இயற்கை அழகை பூங்கா இழந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பூங்காவில் உள்ள மரக்கன்றுகள் மற்றும் புற்களுக்கு தண்ணீர் ஊற்றாத காரணத்தால் கருகி வருகிறது. அதனால் மாவட்ட நிர்வாகம் மீண்டும் பூங்காவை சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.