கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு 211 பேர் வேட்பு மனுத்தாக்கல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 98 பதவிகளுக்கு நடத்தப்பட இருக்கிற இடைத்தேர்தலில் இதுவரையில் 211 பேர் வரையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஆட்சியர் மற்றும்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:40 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 98 பதவிகளுக்கு நடத்தப்பட இருக்கிற இடைத்தேர்தலில் இதுவரையில் 211 பேர் வரையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 28ம் தேதி முதல் தொடங்கி, கடைசி நாளான வியாழக்கிழமை வரையில் நடைபெற்றது. இதில், காலியாக உள்ள 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வார்டு பதவிகளுக்கு 8 பேரும், 4 வட்டார ஊராட்சி ஊறுப்பினர் பதவிகளுக்கு 25 பேரும், 7 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 25 பேரும்,

73 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 126 பேரும், ராஜபாளையம், விருதுநகர் நகராட்சிகளில் காலியாக உள்ள 6 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 27 பேரும் என மொத்தம் 211 பேர் வரையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது இன்று(வெள்ளிக்கிழமை) பரிசீலனை நடைபெற இருக்கிறது. செப்-8ம் தேதி வேட்பு மனுக்களை மாலை 3 மணி வரையில் திரும்பப் பெற்றுக்கொள்ளவும், அன்றே இறுதிப்பட்டியலும் வெளியிடப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு  செப்.18-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதையடுத்து, செப்.22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதாகவும் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தல் கடந்த 30.6.2014 தேதி வரையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.