கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 18 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் உள்பட 18 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் அரசு அறிவித்துள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:40 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் உள்பட 18 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் அரசு அறிவித்துள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

பள்ளிகளில் சிறப்பாக மாணவ, மாணவிகளுக்கு சேவைப்பணி செய்து வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில் நாளை ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற  அறிவிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு:

மாதங்கோவில்பட்டி, சி.எஸ்.ஐ.தொடக்கப்பள்ளி-சா.ஜான்மார்ட் (தலைமையாசிரியர்), சிப்பிப்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி-சந்தராஜ்(தலைமையாசிரியர்), ராமுத்தேவன்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- தங்கலட்சுமி(தலைமையாசிரியை), மேலேந்தல் டி.இ.எல்.சி தொடக்கப்பள்ளி-வி.வின்சென்ட்(தலைமையாசிரியர்), சுக்கிலநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-க.விஜயமீனா(தலைமையாசிரியை), அ.முக்குளம் இந்து தொடக்கப்பள்ளி-ஆ.ரேவதி(தலைமையாசிரியை), டி.மானகசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இ.ராஜேஷ்(தலைமையாசிரியர்), கான்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- த.கலையரசி(தலைமையாசிரியை), நரையங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-ஜெயக்குமார்ஞானராஜ்(இடைநிலை ஆசிரியர்), ஜோகில்பட்டி அரசு ஆசிரியர் பயிற்சி நிலையம்-த.வைரமுத்து(முதல்வர்),

பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம்-ஆர்.கைலாசவாணி(முதுநிலை விரிவுரையாளர்), மேட்டமலை, சௌத்சைடு மெட்ரிகுலேசன் பள்ளி-ஆர்.சாந்தி(முதல்வர்), அருப்புக்கோட்டை சாலியர் மேல்நிலைப்பள்ளி-ஆர்.இளங்கோவன்(தலைமை ஆசிரியர்), காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி-சின்னமநாயுடு(தலைமையாசிரியர்), சேத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி-எம்.அனுசுயா(தலைமையாசிரியை), ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி-இரா.அய்யாசாமி(தலைமை ஆசிரியர்), ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி-வி.சீனிராஜ்(தலைமையாசிரியர்), விருதுநகர் சுப்பையா நாடார் அரசுமேல்நிலைப்பள்ளி-து.பழனிச்சாமி(முதுகலை ஆசிரியர்)ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருக்கிறது.

எனவே நிகழாண்டில் பள்ளியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாணவ, மாணவிகளிடம் அன்போடு பழகி நல்ல வழிகாட்டு ஆசிரியராகவும் இருக்க வேண்டும். இதுபோன்ற சேவை செய்தவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் சேத்துப்பட்டில் உள்ள எம்.ஜி.ஜி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 5-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருது பெருகிற ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்க பணம், பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவைகளை கொண்டதாகும் என  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயகுமார் தெரிவித்தார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.