கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

எஸ்.பி.ஐ வங்கியில் போலியான காசோலை கொடுத்து ரூ.7.35 லட்சம் மோசடி

மகராஷ்டிராவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் மதுரா லைப் ஸ்டைல் என்ற தனியார் நிறுவனம் கணக்கு வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் காசோலையை போலியாக புனே அருகே உள்ள சோம்வார்பேட் பகுதியைச்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:40 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் எஸ்.பி.ஐ வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ.7.35 லட்சம் மோசடி செய்ததாக புனேவைச் சேர்ந்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மகராஷ்டிராவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் மதுரா லைப் ஸ்டைல் என்ற தனியார் நிறுவனம் கணக்கு வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் காசோலையை போலியாக புனே அருகே உள்ள சோம்வார்பேட் பகுதியைச் சேர்ந்த மகேஷ் கனியால் தக்கார்(40) தயார் செய்துள்ளார். அதோடு, இந்த காசோலையில் ரூ.7 லட்சத்து 35 ஆயிரத்து 230 என பூர்த்தி செய்து, விருதுநகர் கச்சேரி சாலையில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் கலெக்சனுக்கு கொடுத்துள்ளார். மேற்குறிப்பிட்ட நபர் கொடுத்த அந்த காசோலையை விருதுநகர் பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையிலிருந்து, எஸ்.பி.ஐ வங்கிக்கு ஆய்விற்காக அலுவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதை எஸ்.பி.ஐ வங்கி கிளை அதிகாரிகள் சரிபார்த்து காசோலை சரியானது தான் சான்றளித்து, பின்னர் குறிப்பிட்ட பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கிலிருந்து ரூ.7.35 லட்சம் எடுத்தது தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதோடு, மதுரா நிறுவன அதிகாரிகள் உடனே எஸ்.பி.ஐ வங்கி கிளைக்கு யாருக்கும் காசோலை கொடுக்கவில்லை என்றும், அந்த எண்ணுள்ள காசோலை தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்குள் மகேஷ் கனியால் தக்கார் புனேவில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் காசோலை மூலமாக ரூ.6.50 லட்சமும், ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.45 ஆயிரத்தையும் எடுத்துள்ளாராம். மேலும், இவரது கணக்கில் ரொக்கமாக ரூ.41,153 மட்டும் இருப்பு உள்ளது. எனவே போலியான காசோலை மூலம் பணம் எடுத்து மோசடி செய்ததாக எஸ்.பி.ஐ வங்கியின் மண்டல மேலாளர் நரசிம்மன், விருநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் செவ்வாய்கிழமை இரவு புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து புனேவைச் சேர்ந்த மகேஷ் கனியால் தக்காரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.