சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் கேவிஎஸ் பள்ளிகளின் சார்பில் மராத்தான் ஓட்டப்போட்டி

கே.வி.எஸ்.பள்ளிகளின் 125-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.வி.எஸ்.பள்ளிகளின் சார்பாக மராத்தான் ஓட்டப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:23 am

எஸ். பாண்டியன்

கே.வி.எஸ்.பள்ளிகளின் 125-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.வி.எஸ்.பள்ளிகளின் சார்பாக மராத்தான் ஓட்டப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு செயலாளர் மதன்மோகன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக விருதுநகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி பங்கேற்று மராத்தான் ஓட்டப்போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டி கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கி, நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக 9.5 கி.மீ தூரம் வரையில் சென்று கே.வி.எஸ் நடுநிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களும், தற்போது படித்து வரும் மாணவர்களும் என மொத்தம் 1200 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் எம்.கற்பகமூர்த்தி 28.4 நிமிடத்தில் வந்து முதலிடமும், கே.ஜெயக்குமார் இரண்டாம் இடமும், எம்.பிரவீன்குமார் மூன்றாம் இடமும் பெற்றனர். அதேபோல், தற்போது பள்ளியில் படித்து வரும் பவளச்செல்வம் முதலிடமும், கே.வினோத்குமார் இரண்டாம் இடமும், என்.மணிகண்டன் மூன்றாம் இடமும் பெற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரமோகன் நிறைவாக நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கேவிஎஸ் பள்ளிகளின் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.