சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் அருகே பெண் ஆசிரியரை மிரட்டியதாக ஆசிரியர் மீது வழக்கு

விருதுநகர் அருகே பெண் ஆசிரியரை வழிமறித்து அமிலம் வீசிவிடுவதாக மிரட்டிய தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.....

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:22 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பெண் ஆசிரியரை வழிமறித்து அமிலம் வீசிவிடுவதாக மிரட்டிய தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மீது சூலக்கரை காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மலைக்கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆனந்தி(28). இப்பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாராம். விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(28). விருதுநகர் தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் புதுப்பேருந்து நிலையம் ரயில்வே கேட் பகுதி அருகே ஆனந்தி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, அந்த வழியாக வந்த பாண்டியராஜன், தன்னுடன் பேச வலியுறுத்தியும், இல்லையென்றால் அமிலம் வீசி விடுவதாகவும் மிரட்டினாராம். இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து  நடந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.