சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் மாவட்டத்தில் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி

விருதுநகர் மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதால் அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்குமாறு

News image
Updated On :5 ஜனவரி 2024, 3:59 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதால் அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியர் டி.என்.ஹரிஹஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்:

மாநில அரசின் முதன்மை செயலாளர், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் ஆகியோர், அந்தந்த மாவட்ட தொழில் அலுவலர்கள் மூலம் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் குறித்த முழு விவரங்களையும் கணக்கெடுப்பு செய்வதற்கு மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்பு துறையின் முதன்மை ஆணையர்  உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழக அரசின் மொத்த உற்பத்தித் திறனில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு குறித்த மாதிரி கணக்கெடுப்புப் பணி நடைபெற இருக்கிறது. இப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரால் நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் முழு விவரங்களையும் இம்மாதம் முதல், தொடர்ந்து அடுத்தாண்டு ஜனவரி வரையில் கணக்கெடுப்புக்கு அணுக இருக்கின்றனர்.

இதில், நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கை திறன், மூலப் பொருள்கள், எரிபொருள், வேலைவாய்ப்பு, ஊதியம், கூலி, ஏற்றுமதி, நிலையான பொருள்கள் மதிப்பீடு, இயந்திர தளவாடங்கள் மதிப்பீடு, உற்பத்தி மற்றும் சேவை விவரங்கள், ஒட்டுமொத்த மூலதனம், கடன் பெற்ற விவரம், கடன் நிலுவை உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். புள்ளிவிவர கணக்கெடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஆகவே, கணக்கெடுப்பாளர்கள் வரும்போது சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் உண்மையான தகவல்களை அளித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.