கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ரயிலில் கழிவறையில் தவறவிட்ட பர்சை மீட்டு பயணிடம் ஒப்படைத்த போலீஸார்

விருதுநகர் அருகே ஓடும் ரயிலில் கழிப்பறையில் தவறவிட்ட மணிபர்சை மீட்டு மீண்டும் பயணிடம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள்(65). இவருக்கு திருமணம் ஆகவில்லையாம்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:20 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஓடும் ரயிலில் கழிப்பறையில் தவறவிட்ட மணிபர்சை மீட்டு மீண்டும் பயணிடம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள்(65). இவருக்கு திருமணம் ஆகவில்லையாம்.

இந்நிலையில் ராஜபாளையத்திலிருந்து மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்காக செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயிலில் ஏறி சனிக்கிழமை பயணம் மேற்கொண்டாராம்.

அப்போது, திருத்தங்கல் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது கழிப்பறைக்கு சென்றாராம். அப்போது, கையில் வைத்திருந்த மணி பர்சை   கழிப்பறைக்குள் தவறி விட்டாராம். அதை எடுப்பதற்கு முயற்சி செய்கையில் தண்டவாள தரைப்பகுதியில் விழுந்துள்ளது.

இதையடுத்து என்ஜின் கோளாரால் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்று பர்சை தவற விட்டது குறித்தும், அதில் சிகிச்சைக்காக ரூ.15 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டாராம். உடனே ரயில்வே சார்பு ஆய்வாளர் தேடி பார்க்கும் படி காவலர் தெய்வத்திடம் கூறினாராம்.

அதையடுத்து, தவற பர்சை தேடி காரிசேரிக்கும்-திருத்தங்கல்லுக்கும் இடைப்பட்ட பகுதியில் தேடினாராம். அப்போது, அந்த பர்சு திருத்தங்கல் ஆலவூரணி தண்டவாளப் பகுதியில் கிடந்துள்ளது. உடனே அதை மீட்டு ரயில் பயணி முனியம்மாளிடம் ஒப்படைத்தனர். பின்னர் தாமதமாக புறப்பட்டுச் சென்ற அதே ரயிலில் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.