அங்கன்வாடி மைய பணியாளர்: இப்பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், பழங்குடியினர் 8-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 31.10.2014 அன்றைய நாளில் 25 வயது முதல் 35 வயதிற்குள்ளும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25 வயது முதல் 40 வயது வரையிலும், மலைப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 20 முதல் 40 வயது வரையிலும் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கிறவர்கள் அப்பகுதி ஊராட்சியை சேர்ந்தவர்களாகவும் அல்லது துணைக்கிராமத்தை சேர்ந்தராகவும் இருக்க வேண்டும். தகுதியான நபர் கிடைக்காத நிலையில் 10 கி.மீ சுற்றளவு அல்லது அருகில் உள்ள ஊராட்சியைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.