கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

திருச்சுழி அருகே கிராம அளவிலான பேரிடர் பாதுகாப்பு மையம்

விருதுநகர் அருகே இயற்கை பேரிடர்கள் குறி்த்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம அளவிலான பேரிடர் பாதுகாப்பு தகவல் மையத்தை ஸ்பீச் தொண்டு நிறுவனம் சார்பில் தொடங்கி

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:20 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இயற்கை பேரிடர்கள் குறி்த்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம அளவிலான பேரிடர் பாதுகாப்பு தகவல் மையத்தை ஸ்பீச் தொண்டு நிறுவனம் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சுழி மற்றும் மதுரையைச் மையமாக வைத்து ஸ்பீச் தொண்டு நிறுவனம், விருதுநகர் மாவட்ட தட்பவெப்ப நீதிக்கான குழந்தைகள் இயக்கம் சார்பில் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, கல்வி மேம்பாடு, புவிவெப்பமயமாதலை தடுத்தல், சிறுமிகள் திருமணத்தை தடுத்தல், பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்தல், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட சமுதாய பணிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில், தற்போது இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியம் உடையனாம்பட்டியில் கிராம அளவிலான பேரிடர் பாதுகாப்பு தகவல் மையம்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஸ்பீச் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஜான்தேவாரம் தொடங்கி வைத்தார்.

இந்த மையத்தில் அப்பகுதியில் உள்ளவர்களின் மக்கள் தொகை, விளைநிலங்கள், வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்கள், தற்போது சூழ்நிலைக்கேற்ப தானியப் பயிர்கள்  செய்யலாம், கல்வி நிலையங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் கிராம மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கணிப்பொறி மற்றும் இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் மையம் நாள்தோறும் 24 மணிநேரமும் செயல்படும். இதன் மூலம் இயற்கை பேரிடர்கள் பற்றிய தகவல்களான வானொலி, தொலைக்காட்சி, துண்டு பிரசுரங்கள், நாளிதழ்கள் ஆகியவைகள் மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். மேலும், கிராம அளவில் பேரிடர் பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளித்தல், விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி தொடர்பான ஆலோசனை பணிகளும் இம்மையங்கள் மூலம் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்பீச் தொண்டு நிறுவனம் மற்றும் விருதுநகர் மாவட்ட தட்பவெப்ப நீதிக்கான குழந்தைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.