கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயிலில் என்ஜின் கோளாறு: 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது

செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் செங்கோட்டையில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 3.50 மணிக்கு சென்று சேரும். அதேபோல், சனிக்கிழமையும் சரியான நேரத்திற்கு புறப்பட்டு சென்று

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:20 am

எஸ். பாண்டியன்

செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயிலில் என்ஜின் கோளாறு காரணமாக விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் செங்கோட்டையில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 3.50 மணிக்கு சென்று சேரும். அதேபோல், சனிக்கிழமையும் சரியான நேரத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது,  விருதுநகரை அடுத்த மீசலூர் அருகே வரும் போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டு புகை அதிகமாக வெளியேறியுள்ளது. மேலும், அதிக சூடினால் ஆயில் டேங்கிலிருந்து வெளியேறி பின்புறம் உள்ள 5 ரயில் பெட்டிகள் வரையில் பயணிகள் மீது ஆயில் தெறித்து விழுந்துள்ளது. இதையடுத்து பயணிகள் அபாயச் சங்கிலியை  பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். உடனே என்ஜின் டிரைவர் இறங்கி பார்க்கையில் புகையோடு, ஆயிலும் கொதித்து தெறித்துள்ளது. இது தொடர்பாக உடனே ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து 10 நிமிடம் நின்ற பின் சீரான வேகத்துடன் ரயிலை இயக்கி விருதுநகர் ரயில் நிலையத்திற்கு 2.40 மணிக்கு வரவேண்டிய நிலையில் தாமதமாக 3.15 மணிக்கு வந்து சேர்ந்தது. இது தொடர்பாக விருதுநகர் ரயில் நிலைய அதிகாரிகள் என்ஜினை பார்வையிட்டு உடனே சரிசெய்ய முடியாத நிலையில் மாற்று என்ஜின் கொண்டு வர மதுரை ரயில் நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் உடனே மதுரையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டு சரியாக மாலை 4.45 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால், ரயில் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஊர்களுக்கு சென்று சேரமுடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகியினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.