காவலர்கள் பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்காக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அப்போது, அவர்கள் குடும்பத்தினருடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதைக் கருத்திற் கொண்டு காவலர்களும் எந்த இடத்திலிருந்து உடனுக்கு உடன் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த தாய், த்ந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் மனைவி ஆகியோருடன் பேசும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குரூப் சிம்கார்டுகள் வழங்கப்பட இருக்கிறது. இதற்கு முன்பு காவலர்களுக்கு சிம்கார்டு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு மாத கட்டணமாக ரூ.247 மட்டும் அரசு செலுத்தி வந்தது. அதை காவல் துறையினருடன் மட்டும் தொடர்பு கொண்டு பேச முடிந்தது. தங்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் பேசுவதற்கு தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்தது. இதனால் கூடுதல் செலவு ஏற்பட்டது.