கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக ராணுவ வீரர்கள் மீது வழக்கு

அருப்புக்கோட்டையில் இருந்து-எம்.ரெட்டியபட்டி வழியாக செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு சுத்தமடம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் ஓட்டுநராக சிவயோகனும், நடத்துனராக

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:19 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியது தொடர்பாக எம்.ரெட்டியபட்டி போலீஸார் ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டையில் இருந்து-எம்.ரெட்டியபட்டி வழியாக செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு சுத்தமடம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் ஓட்டுநராக சிவயோகனும், நடத்துனராக சண்முகசுந்தரமும் இருந்தனர். இதில், எம்.ரெட்டியபட்டியில் இருந்து எஸ்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜ்(28), கீழபரளச்சியைச் சேர்ந்த விஜயகுமார்(25) ஆகியோர் பேருந்தில் பயணம் செய்தனர். இவர்கள் இருவரும ராணுவவீரர்களாக பணியாற்றி வருவதால் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், சாலை மோசமாக இருந்ததால் மெதுவாக பேருந்தை ஓட்டுநர் இயக்கியுள்ளார். அப்போது, விஜயகுமார் பேருந்தை வேகமாக இயக்கச் சொன்னாராம். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அதையடுத்து பயணிகள் சமதானம் செய்து வைத்தார்களாம். பின்னர் சுத்தமடத்திற்கு சென்று பேருந்தை நிறுத்திவிட்டு அங்குள்ள திருக்கோயில் வளாகத்தில் ஓட்டுநரும், நடத்துநரும் தூங்கினார்களாம்.

அங்கு இரவில் வந்த விஜயகுமார், பாண்டியராஜ் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து ஓட்டுநர் சிவயோகனை சரமாரியாக தாக்கினார்களாம். இது தொடர்பாக ஊமைக்காயம் அடைந்த சிவயோகன் தங்கள் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு புதன்கிழமை எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.