அப்போது, அங்கிருந்த தென்னங்குடில் பகுதியிலிருந்து போலீஸாரை பார்த்ததும் ஓடி முயற்சி செய்த போது சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை பிடித்த போலீஸார் விசாரணை செய்ததில் அருகில் உள்ள ஓ.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி(41), ரவி(34), வீரபத்திரன்(35) மற்றும் காந்தி(37) என்பது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி தயார் செய்வதற்காக வைத்திருந்த கரிமருந்து, டெக்டான் பவுடர் மற்றும் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.