ஹைதராபாத்: பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் 1,085 புதிய மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்ய, தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (டிஜிஎஸ்ஆர்டிசி), முடிவு செய்துள்ளது.
எவே டிரான்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இது தொடர்பாக ஒப்பந்த கடிதம் பெற்றுள்ளதாக ஒலெக்ட்ரா கிரீன்டெக் லிமிடெட் நிறுவனம் இன்று (பிப். 23) தெரிவித்துள்ளது.
இது குறித்து ஒலெக்ட்ரா நிறுவன நிர்வாக இயக்குநர் மகேஷ் பாபு மேலும் தெரிவித்ததாவது:
''பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிப்போம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கும் உலகத் தரம் வாய்ந்த மின்சாரப் பேருந்துகளை உருவாக்குவதற்கு எங்கள் அர்ப்பணிப்பு வலுவான வலுவூட்டலைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் நிகர-பூஜ்ஜிய பங்களிப்பை வழங்க, வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திறமை, வசதி மற்றும் நிலையான சேவையை வழங்க தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திடம் நாங்கள் நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்குகிறோம்'' எனக் குறிப்பிட்டார்.
ஒலெக்ட்ரா மின்சார பேருந்துகள் 12 மீட்டர் தாழ்தள கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும். ஏசி மற்றும் ஏசி அல்லாத வகைகளில், இந்திய சாலை நிலைமைகளுக்கு ஏற்ப அதிக அதிர்வெண் கொண்ட நகர்ப்புற செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிரத்யேக சக்கர நாற்காலி உடன் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த, மேம்பட்ட முன் மற்றும் பின்புற ஏர் சஸ்பென்ஷன் அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரே சார்ஜில் 250 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும் உயர் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த பேருந்துகள், சுமார் 45 நிமிடங்களில் சார்ஜ் ஆகி விடும்.
Summary
Olectra Greentech Ltd said it has secured a Letter of Intent from the Telangana State Road Transport Corporation through Evey Trans Pvt Ltd for 1,085 electric buses under the PM E-DRIVE initiative.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி உயிரியல் பூங்காவில் பெண் ஓநாய் உயிரிழப்பு

200 மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் தொடங்கி வைத்தாா்

கல்வியாண்டின் இடையில் ஓய்வு: ஆசிரியா்களின் மறு நியமனத்துக்கு நிபந்தனைகள் வெளியீடு

300 மின்சார இணைப்புச் சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரியது மாநகா் போக்குவரத்துக் கழகம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



