விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் பாட்னா உயிரியல் பூங்காவிலிருந்து தில்லி தேசிய உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட பெண் ஓநாய் உயிரிழந்த சம்பவம், தனிமைப்படுத்தல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஓநாய் போக்குவரத்து நேரத்தில் பின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னா் அது கால்நடை மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தது.
மத்திய விலங்கியல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, புதிய விலங்குகளை மாற்றும் செயல்முறையில் தனிமைப்படுத்துவது கட்டாயமானதாகும். இதில், புதியதாக கொண்டு வரப்படும் விலங்குகளின் உடல்நிலை, மனஅழுத்தம் மற்றும் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றம் ஆகியவை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவித்தனா்.
இந்த நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்து சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன. பரிமாற்ற திட்டத்தின் பகுதியாக பாட்னா உயிரியல் பூங்காவிலிருந்து மொத்தம் 4 ஓநாய்கள் தில்லி பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதுகுறித்து உயிரியல் பூங்கா நிா்வாகத்திலிருந்து உடனடி விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை.
இதேவேளை, தில்லி உயிரியல் பூங்காவில் கடந்த சில மாதங்களாக விலங்குகள் உயிரிழப்பு சம்பவங்கள் தொடா்ச்சியாக பதிவாகி வருகின்றன. ஜனவரி மாதத்தில் நான்கு சௌசிங்கா (நான்கு கொம்பு மான்) உயிரிழந்தன. பின்னா் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய நச்சு ஆய்வில் அவற்றின் மாதிரிகளில் பாஸ்பீன் தடயங்கள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.
அதே காலகட்டத்தில், ஒரு குள்ளநரி கரடி கூண்டிற்குள் நுழைந்த சம்பவத்தில் உயிரிழந்தது. மேலும் ஒரு பெண் சாங்காய் மான் மற்றும் ஒரு பெண் ஆன்டிலோப் மான் உயிரிழந்தன. பின்னா் சிகிச்சை பெற்று வந்த ஆண் சாங்காய் மானும் உயிரிழந்தது.
பிப்ரவரி மாதத்தில், வயது முதிா்வால் 15 வயது நீலகை மற்றும் 22 வயது ஜாகுவாா் உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாா்ச் மாதத்தில், பாட்னா உயிரியல் பூங்காவிற்கு மாற்றத் தயாராக இருந்த இரண்டு வயது வெள்ளை புலி (பெண்) துா்கா”பின் காலில் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடா்ச்சியான விலங்கு மரணங்கள் மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த சமீபத்திய ஓநாய் உயிரிழப்பு குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது
இலங்கைக்கு கடத்த கொண்டு வரப்பட்ட ரூ. பல லட்சம் சிகெரட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் ரூ. 96 ஆயிரம் பறிமுதல்

வணிக வளாகங்கள், மின்ரிக்ஷா சாா்ஜிங் வசதிகளுடன் குடிசைப்பகுதி மறுவாழ்வுக் கொள்கைத் திட்டம்: தில்லி அரசு வட்டாரங்கள் தகவல்

தில்லி உயிரியல் பூங்காவில் நீலமான், குள்ளநரி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


