தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு பற்றி...

News image
கனிமொழி - படம் - எக்ஸ் / கனிமொழி
Updated On :23 பிப்ரவரி 2026, 11:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நேற்று(பிப்.22) முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் திமுக எம்.பி. கனிமொழியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு பற்றி கிரிஷ் சோடங்கர் கூறுகையில். "

பல பிரச்னைகள் பற்றி பேசினோம். தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகவில்லை. மாநிலங்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேசினோம். சரியான நேரத்தில் தொகுதிகள் எத்தனை என்பது குறித்து அறிவிப்போம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது பற்றியும் பேசியுள்ளோம். ஆனால் அதைவிட தொகுதிப் பங்கீடு முக்கியம்" என்றார்.

கனிமொழி கூறுகையில், "முதலமைச்சரை கே.சி. வேணுகோபால் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியுள்ளார். திமுகவில் பெண்கள் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்கிறார்கள். மகளிருக்கான ஆட்சி இது, மகளிருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சமூக அங்கீகாரத்திற்கான ஆட்சியாக இந்த ஆட்சி அமைந்துள்ளது. மகளிரின் உரிமைகளுக்காக வரும் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவார்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.