விருதுநகர் மாவட்டம், கூமாபட்டியைச் சேர்ந்தவர் ஜே.எம்.கோஸ். இவர் திமுகவில் எஸ்.கொடிக்குளம் முன்னாள் பேரூராட்சி தலைவராகவும், நகரச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட சீட்டு கேட்டு விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது திமுகவில் லட்சக்கணக்கில் பணம் இருந்தால்தான் தேர்தலில் நிற்க முடியும். அதற்காக ரூ.32 லட்சத்தை அரு்பபுக்கோட்டை பாலையம்பட்டியில் அவரது நூற்பாலையில் வைத்து கொடுத்தாராம். ஆனால், பணத்தை பெற்று கொண்ட நிலையிலும் சீட்டு வாங்கிக் கொடுக்கவில்லையாம்.