தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 10,500 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த நவ.10-ம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் காவல் இளைஞர் படைக்கு 320 பேரை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் மூலம் 1714 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதையடுத்து, கடந்த டிச.30,31 ஆகிய நாள்களில் இவர்களுக்கான உடற் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து நடந்த உடற்தகுதி தேர்வில் 312 தேர்வாகியுள்ளனர். ஏற்கனவே இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.