சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்குறைஞர்களை மட்டுமே நீதிபதிகளாக தேர்வு செய்து வருகின்றனர். அதேபோல் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் வழக்குரைஞர்களையும் உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடத்திற்கு தேர்வு செய்து நியமிக்க வேண்டும்.தற்போது, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 12 பேரின் நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினர் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வழக்குகள் விசாரணை நடைபெறாமல் இருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.